தன்னிச்சையாக எடுத்த விவாகரத்து முடிவு - நடிகர் ஜெயம் ரவியின் மனைவி நெகிழ்ச்சியான பதிவு !!!

Update: 2024-09-11 05:55 GMT

ஜெயம் ரவி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பரவி வந்த நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மனவேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும் என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெரியப்படுத்த விரும்புகிறேன்.

பரஸ்பர நம்பிக்கை மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம் கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன். என் கணவரிடம் மனம் விட்டு பேச என் கணவரை சந்திக்க வேண்டும் என சமீப காலமாக முயற்சிகளை எடுத்தேன். ஆனால் அதற்கான வாய்ப்புகள் எல்லாம் எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ஆழ்ந்த மனவேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவோ இப்போதும் விரும்புகிறேன், ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களையும் மிகுந்த சிரமத்துடன் எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலமும் எதிர்காலமும் முதல் முக்கியம் வாய்ந்தது. இந்த ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது. மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது இந்நிலையில் இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளை தைரியத்துடன் ஒருத்தியாக நின்று அவர்களைப் பாதுகாப்பது என் தலையாய கடமை.

இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டுமின்றி நல்வழி காட்டி வரும் பத்திரிகை ஊடகம் மற்றும் ரசிக பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி, உங்கள் அன்பும் ஆதரவு மட்டுமே என்னையும் என் குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் தூணாக காத்து நிற்கும் இந்த சோதனையில் இருந்தும் நாங்கள் மீண்டு வர உங்களை பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News