ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை.

ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை.

Update: 2023-12-03 16:13 GMT
ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் முத்துச்சாமி தெருவை சார்ந்தவர் ராஜா ராம் இவருடைய மகன் அருண்காந்தி. இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண் இவருடைய காதலை ஏற்க மறுத்த காரணத்தால் மன வேதனையில் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணத்தால் விருதுநகர் துலுக்கப்பட்டி ரயில் நிலையத்திற்கு உட்பட்ட தந்திமரத்தெரு ரயில்வே கேட் அருகே ரயில் முன்பு பாய்ந்து அந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News