பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2024-02-27 04:52 GMT
விபத்து  நடந்த பட்டாசு ஆலை 
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள ராமுதேவன்பட்டியில் கடந்த 17 ஆம் தேதி விக்னேஷ்வரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். மேலும் 6 பேர் படுகாயமடைந்து விருதுநகர் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த ரங்கம்மாள் சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழந்தார். மேலும் 5 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News