ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் என கூறி மோசடி - தம்பதிக்கு சிறை  

தஞ்சாவூரில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் என கூறி பணம் பறித்த மோசடி கணவன் – மனைவிக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.  

Update: 2024-06-13 05:34 GMT
பைல் படம் 

தஞ்சாவூரில் கடந்த 2021 ஆம் ஆண்டில் பிரபல மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், ஜவுளிக்கடை உரிமையாளர்கள், தொழிலதிபர்கள் என பலரிடம்,  கோயம்புத்துார் மாவட்டம் சித்தாபுதார் பகுதியை சேர்ந்த சந்தானபாரதி (47), அவரது மனைவி ரீட்டா பபியோலா (53), ஆகிய இருவரும், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் என அறிமுகம் செய்து கொண்டு, அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு பணம் தேவைப்படுவதாகவும்,  தலா 50 ஆயிரம் அனுப்புமாறு, வங்கி கணக்கு விபரங்களை அனுப்பி வைத்துள்ளார்.

அவரது பேச்சில் சந்தேகமடைந்த பலர், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் தேதி, சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தனர். இதையடுத்து சந்தானபாரதி அவரது மனைவி ரீட்டா பபியோலா இருவரையும் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், சந்தானபாரதி சென்னை, திருப்பூரில் மோசடி வழக்கில், இரண்டு முறை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்.கடந்த 2017 ஆம் ஆண்டு வேலூர், நீலகிரி, 2019 ஆம் ஆண்டு கரூர் ஆட்சியர்கள் பெயரை கூறி பலரிடம் பணம் பறித்தது தெரியவந்தது. இவ்வழக்கு தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்:1 இல் நடந்து வந்தது. நீதிபதி எஸ். சுசீலா வழக்கை விசாரணை செய்து, குற்றம்சாட்ட சந்தானபாரதி அவரது மனைவி ரீட்டா பபியோலா ஆகிய இருவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News