சத்தியமங்கலத்தில் பட்டபகலில் பணம் திருடிச்செல்லும் இளைஞர்கள்

சத்தியமங்கலத்தில் ஸ்டேட் பேங்க் முன்பு பட்டபகலில் பைக்கில் வந்து பணம் திருடிச்செல்லும் இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-05-11 11:17 GMT

சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சத்தியமங்கலத்தில் ஸ்டேட் பேங்க் முன்பு பட்டபகலில் பைக்கில் வந்து பணம் திருடிச்செல்லும் இளைஞர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பாரத் ஸ்டேட் பாங்க் இயங்குகிறது. நேற்று பேங்கிற்கு பணம் கட்டுவதற்கு தனது மகளுடன் வந்துள்ளார்.

பணம் தேவைப்பட்டதால் வங்கியின் முன்பு உள்ள ஏ.டி.எம் மெசினில் பணம் எடுப்பதற்காக தனது மகளை அனுப்பிவிட்டு மகள் பணம் எடுக்க உள்ளே சென்றவுடன் இவர் பணம் இருந்த பேக்கை பைக்கின் டேங்கவரில் வைத்து விட்டு அருகே இருந்த கடைக்குச் சென்று நண்பருடன் பேசிகொண்டு இருந்துள்ளர். 

 அப்போ பைக்கில் வந்த இருவர் பணம் வைத்திருந்த பேக்கை தூக்கி கொண்டு பைக்கில் தப்பிச்செல்ல முயன்றனர். இதை கண்ட பணத்தின் உரிமையாளர் அந்த நபரின் சட்டையை பிடித்து இழத்ததில் பணத்தின் பேக்கை வீசி விட்டு வாகனத்தில் தப்பிசென்றனர். இந்த காட்சி அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. சத்தி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News