திண்டிவனம் அருகே மது பாட்டில்கள் கடத்தியவர் கைது

போலீசார் விசாரணை

Update: 2024-08-25 14:52 GMT
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் மயிலம் போலீசார், கொல்லியங் குணம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப் போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி, அவரிடம் விசாரித்து சோதனையிட்டனர். அதில், அவர் மேல்மலையனூர் மோட்டூர் கிரா மத்தை சேர்ந்த தாசு மகன் ராஜன் (வயது 35) என்பதும் அவர் புதுச்சேரியில் இருந்து 48 மது பாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ராஜனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதே போல் பெரும்பாக்கம் பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எடுத்து சென்று கொண்டிருந்த எறையூர் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் காமாட்சி பாண்டியன் (24) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 14 புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News