உடுமலையில் நடைபெற்ற குறு மைய போட்டியில் மாணவிகள் அசத்தல்

பள்ளி நிர்வாகம் பாராட்டு

Update: 2024-08-25 17:27 GMT
பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வி ஆண்டிற்கான குறுமைய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் உடுமலை குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.போட்டியில் உடுமலை பகுதியைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மானவர்கள் கலந்து கொண்டனர்.இதில் உடுமலை ஆர்.கே.ஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 8 ம் வகுப்பு மாணவி ஏ.எஸ்.மிருதுளா இளையோருக்கான சதுரங்க விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். இதே போன்று 7 ம் வகுப்பு மாணவி ஆர்.ஜெயஸ்ரீ மூன்றாமிடம் பிடித்தார்.போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மாணவிகள் இருவரும் மாவட்ட அளவில் விளையாடத் தகுதி பெற்று உள்ளனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும், ஊக்குவித்த ஆசிரியர்களையும் உடுமலை ஆர்.கே.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.கே.ராமசாமி,செயலர் ஆர்.கே.ஆர்.கார்த்திக்குமார், முதல்வர் டி.மாலா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News