கஞ்சா விற்றவர் கைது!

குற்றச்செய்திகள்

Update: 2024-08-26 03:50 GMT
ஆலங்குடி கீரமங்கலத்தில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்பியின் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, காசிம்பு துப்பேட்டையில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த மணமேல்குடி கிருஷ்ணா ஜிபட்டினத்தை சேர்ந்த இப்ராஷா (52) என்பவரை போலீசார் கைது செய்து, ஒரு கிலோ 20 கிராம் கஞ்சா மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்து கீரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண் டுள்ளனர்.

Similar News