அன்னவாசலில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நேற்று அன்னவாசலில் உள்ள ஒரு பெட்டிக்கடையை ஆய்வு செய்தபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து பெட்டிகடை உரிமையாளர் சதிஷ்குமார் என்பவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.