சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில்

மத நல்லிணக்க ஒற்றுமை நடைபயணம்

Update: 2024-08-27 15:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்க ஒற்றுமை நடைபயணம் இன்று மாலை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.கே அர்த்தனாரி தலைமையில் நடைபெற்ற இந்த மத நல்லிணக்க ஒற்றுமை நடைபயணத்தை, இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் தொடங்கி வைத்தார். சன்னியாசிகுண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஒற்றுமை நடை பயணத்தில், திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் கட்டமைப்பை பலப்படுத்துவது குறித்து இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் அனையரசு, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் சாகரிக்கா ராவ், மாநில துணைத்தலைவர் நவீன் குமார், ஊடகப்பிரிவு மாநிலத் தலைவர் அரவிந்த் உள்ளிட்ட 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News