தாளவாடியில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுக்கள் பறிமுதல்- போலீஸ் விசாரணை

தாளவாடியில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுக்கள் பறிமுதல்- போலீஸ் விசாரணை

Update: 2024-09-02 04:02 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தாளவாடியில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுக்கள் பறிமுதல்- போலீஸ் விசாரணை ஈரோடு மாவட்டம் தாளவாடி காவல் நிலையம் பஸ் நிலையம் முன்பாக காவல்துறையினர் வாகன சோதனைஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது அதில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் ஓசூர் கிராமத்தை சேர்ந்த சித்தராஜ் என்பதும் தலமலை, நெய்தாலபுரம், சிக்கள்ளி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக கர்நாடக மதுபானங்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச்சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 144 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Similar News