திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

தெற்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

Update: 2024-09-03 13:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியம் மற்றும் ஆலாம்பாளையம் பேரூர் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டமானது காடச்சநல்லூர் அண்ணா நகர் பெருமாள் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது . இந்த நிகழ்விற்கு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் A.இளங்கோவன் ஆலாம்பாளையம் பேரூர் திமுக செயலாளர் எஸ்.பி.கார்த்திக் ராஜா உள்ளிட்டோர் தலைமை தாங்கினர். மாவட்ட அவைத் தலைவர் நடன சபாபதி வரவேற்புரை ஆற்றினார். இதில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் திமுக கழகத்தில் எதிர்வரும் காலத்தில் செய்ய வேண்டிய கட்சி பணிகள் ,ஒன்றிய பகுதிகளில் கிளைகளை வலுப்படுத்துவது, புதிய உறுப்பினர்களை கட்சியில் அதிகமாக சேர்ப்பது ,பொது மக்களுக்கு தேவையான மக்கள் நலத் திட்டங்களை உடனுக்குடன் செய்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கூட்டத்திற்கு வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்கள் எடுத்துரைத்து பேசினர். இதில் ஒன்றியம், கிளை ,பேரூர், இளைஞர் அணி, மகளிர் என பல்வேறு சார்பு அணிகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆலாம்பாளையம் பேரூர் தலைவர் சகுந்தலா, நன்றி உரையாற்றினார்.

Similar News