வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினர்

அரசு நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

Update: 2024-09-04 13:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த பெரியார் நகரில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிக்கான பூமி பூஜை புதன் அன்று நடைபெற்றது. பூமி பூஜைக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில்,ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ், பள்ளிபாளையம் நகராட்சி செல்வராஜ், துணை சேர்மன் பாலமுருகன், நகராட்சி ஆணையாளர், திமுக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு பள்ளிபாளையம் பிஜேபி கட்சியை சார்ந்த பத்து பேர் அங்கு வந்து மத்திய அரசு திட்டம் இது மோடி படம் இடம்பெறவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது குறிக்கிட்ட பள்ளிபாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜ் இது தங்களுடைய கட்சி நிகழ்ச்சி எனவும், இதற்கு நாங்கள் எதற்கு மோடியின் படம் போட வேண்டும் என வந்தது வந்து விட்டீர்கள் அமர்ந்து டீ சாப்பிட்டு விட்டுச் செல்லவும் என்று கேலியாக பேசினார். இதனை அடுத்து அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த பாஜகவினர் தவித்து நின்றனர். இதனை அடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு மத்திய அரசின் திட்டங்களுக்கு,எந்த நிகழ்ச்சியிலும் மோடியின் படம் போடாமல் தான் நீங்கள் செயல்படுவதாகவும் ,இனி வரும் காலங்களில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு மோடியின் படம் இடம்பெறவில்லை அடுத்த முறை மோடி படத்தை இடம்பெற செய்ய வேண்டும் என வேண்டுகோளாய் கேட்பதாக கூறி சென்றனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News