இரும்பு கேட்டில் சிக்கிக்கொண்ட நாயை மீட்ட தீயணைப்புத் துறையினர்

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் வீட்டின் இரும்பு கேட்டில் சிக்கிக்கொண்ட நாயை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

Update: 2024-09-07 19:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல், ரவுண்ட் ரோடு, ராம்நகர், முல்லை தெரு பகுதியில் நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருந்த வீட்டின் வாயில் கேட்டில் நாய் ஒன்று மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடி நீண்ட நேரமாக கத்திக் கொண்டிருந்தது. இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் திண்டுக்கல் தீயணைப்பு துறை நற்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி நவீன உபகரணங்களுடன் நாயை உயிருடன் மீட்டனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். நாயும் தீயணைப்பு துறையினரை பார்த்து வாலை ஆட்டி நன்றி தெரிவித்தது.

Similar News