மீனவர்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா

பள்ளிபாளையம் நகராட்சி மண்டபத்தில் மீனவர்களுக்கு கடன் உதவி அட்டை வழங்கும் விழா நடைபெற்றது

Update: 2024-09-10 13:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி, ஆவாரங்காடு சமுதாய கூடத்தில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா  உள்நாட்டு மீன்பிடிப்பு பகுதிகளில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு  விவசாய கடன் அட்டை ( KCC ) வழங்கும் முகாமில் 11 பயனாளிகளுக்கு ரூ.3.85 இலட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார்.இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் நகர் மன்ற தலைவர்  மோ.செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன்,நகராட்சி ஆணையாளர் தாமரை, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் முருகன் , த.உமா கலைச்செல்வி உதவி இயக்குனர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கலைச்செல்வி, மீன்வள ஆய்வாளர், கு.பிரபாவதி, மீன்வள சார் ஆய்வாளர்,கோகிலவாணி,  மீன்வள மேற்பார்வையாளர்கள் , நகர மன்ற உறுப்பினர்கள்,  நகர திமுக நிர்வாகிகள் மகுடேஷ், திருநாவுக்கரசு, நந்தபிரகாஷ், கார்த்திக் ராஜ், ரவிச்சந்திரன், பச்சையப்பன், சண்முகம், செந்தில்,  கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

Similar News