ஒத்தையூர் அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

ஒத்தையூர் அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

Update: 2024-09-29 11:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஒத்தையூர் அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, லந்தகோட்டை அருகே உள்ள மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா வயது 36. இவர் செப்டம்பர் 28ஆம் தேதி மதியம் 12:15 மணியளவில் கரூர்-திண்டுக்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள ஒத்தையூர், தனியார் பெட்ரோல் பங்க் எதிரே செல்லும் போது, எதிர் திசையில் வேகமாக வந்த கோவை, விளாங்குறிச்சி அருகே உள்ள வள்ளலார் நகர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் ஓட்டி வந்த கார், இளையராஜா ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இளையராஜாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இளையராஜா அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Similar News