ராசிபுரத்தில் ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி சுவாமி சிறப்பு அலங்காரம்..

ராசிபுரத்தில் ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி சுவாமி சிறப்பு அலங்காரம்..

Update: 2024-09-29 14:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பல்வேறு கோயில்கள் மற்றும் சமூக அமைப்பினர் பெருமாளை வணங்கும் விதமாக பல்வேறு சிறப்பு பூஜைகள், சாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் பதினோராம் ஆண்டாக ராசிபுரம் சௌராஷ்ட்ரா விப்ரகுல சமூக மகளிர் சங்கம் சார்பில் பஜனை மடத்தில் ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி சுவாமி சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு சாமிக்கு புதிய 500, 200,100, ரூபாய் நோட்டுகள் மாலையாக அணிவித்து அலங்காரம் செய்து சுவாமிக்கு பிடித்த பலகாரங்கள், பழவகைகள் அனைத்தும் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து மகளிர் பக்தி குழுவினர் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு பக்தி பாடல் பாடினர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Similar News