நாட்டுக்காக உயிர் இழந்த சிஆர்பிஎஃப் வீரர் குடும்பத்திற்கு திமுக சார்பில் ஆறுதல்....

சங்ககிரி:நாட்டுக்காக உயிர் இழந்த சிஆர்பிஎஃப் வீரர் குடும்பத்திற்கு திமுக சார்பில் ஆறுதல்....

Update: 2024-10-10 17:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆந்திர மாநிலத்தில் பணியின் போது உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரரின் குடும்பத்திற்கு திமுக சார்பில் வியாழக்கிழமை ஆறுதல் கூறினர். சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி கிராமம், சுண்ணாம்பு கரட்டூர் பகுதியைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் திருநாவுக்கரசு ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி, அல்லுரு சீதாராமராஜீ மாவட்டம் சிந்தூர் பிரிவில் உள்ள டோங்காயி என்ற பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாரதவிதமாக அப்பகுதியில் பயிர்களை காக்க அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் அவரது உடல் பட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அதனையடுத்து அவரது உடல் காவல்துறை, அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது. இதனையடுத்து திமுக சார்பில் சங்ககிரி ஒன்றிய செயலாளர் கே.எம்.ராஜேஷ் தலைமையில் நிர்வாகிகள் உயிரிழந்த வீரரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். ஒன்றிய திமுக அவைத்தலைவர் கே.எ.கோபால், ஒன்றிய கழக துணை செயலாளர் எஸ்.பாலுசாமி, ஒன்றிய கழக பொருளாளர் செüந்தரராஜன், தேவூர் பேரூராட்சித்தலைவர் டி.தங்கவேல், மாவட்ட நிர்வாகி டி. வெங்கடாஜலம், கோனேரிப்பட்டி கிளை நிர்வாகி அருணாசலம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயலாளர் கே.தங்கவேலன், முன்னாள் மாவட்ட நிர்வாகி சண்முகம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Similar News