டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் திருவள்ளுவர் தினமான அன்றும் தற்காலிகமாக மூடப்படும்

டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் திருவள்ளுவர் தினமான 15.01.2025 அன்றும், குடியரசு தினமான 26.01.2025 அன்றும் தற்காலிகமாக மூடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.;

Update: 2025-01-11 11:31 GMT
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் ; (F.L-1), F.L-2/F.L-3/ F.L-3A /FL-3AA மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி திருவள்ளுவர் தினமான 15.01.2025 (புதன் கிழமை) அன்றும், குடியரசு தினமான 26.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. . மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் (F.L-1) மற்றும் F.L-2/F.L-3/F.L-3A/FL-3AA மற்றும் FL-11 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Similar News