தொழுநோய் ஒழிப்பு திட்ட களப்பணி

நாகை மாவட்ட சுகாதார அலுவலர் நேரில் ஆய்வு;

Update: 2025-02-19 06:32 GMT
நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், கீழையூர் வட்டாரத்தில் 44 குழுக்களும், நாகை வட்டாரத்தில் 43 குழுக்களும் ஆக மொத்தம் 87 குழுக்கள் பொதுமக்களிடம் உள்ள தொழுநோயின் அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டது. ஒரு குழுவிற்கு ஆண், பெண் என 2 களப்பணியாளர்கள் வீதம் அனைத்து வீடுகளுக்கும், வீடு வீடாக சென்று பார்வையிட்டு, யாருக்கேனும் தொழுநோயின் அறிகுறிகள் உள்ளதா என கண்டறியும் பணியை, மாவட்ட தொழுநோய் அலுவலக துணை இயக்குனர் மருத்துவர் சங்கரி கண்காணிப்பில், கடந்த 13 -ம் தேதி முதல் தொடங்கப்பட்டு வருகிற 28 -ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக, கீழையூர் வட்டாரத்தில், வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் நடைபெறும் களப்பணியை, நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் நேற்று நேரடியாக ஆய்வு செய்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது, வேளாங்கண்ணி சுகாதார ஆய்வாளர் சு.மோகன் மேற்பார்வையில், களப்பணியாளர்கள் வீடுகள் தோறும் பார்வையிட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

Similar News