வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி!

குற்றச்செய்திகள்;

Update: 2025-03-12 05:24 GMT
விராலிமலை ஒன்றியம், மாத்தூர் சக்தி நகரை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி சியாமளா. இவர்களுக்கு சக்தி நகரில் 2 வீடுகள் உள்ளன. ஒரு வீட்டில் சியாமளா குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மற்றொரு வீட்டில் பொருட்களை வைத்து பூட்டி வைத்துள்ளனர். நேற்று முன் தினம் நள்ளிரவு பூட்டியிருந்த வீட்டின் கதவை கம்பியால் மர்மநபர்கள் உடைத்துள்ளனர். அந்த சத்தம் கேட்டு எதிர் வீட்டில் வசிக்கும் நபர் வீட்டிற்கு வெளியே வந்து மின் விளக்கை போட்டு பார்த்துள்ளார். அதை பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகு றித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News