புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று 33 அடி உயர குதிரை சிலைக்கு அதன் உயரத்திலேயே பக்தர்கள் மாலை அணிவித்து வழிபட்டனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.