கிருஷ்ணகிரி வீரப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியம் (48) இவரது மகன் சண்முகம் (19) இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததுள்ளது. சண்முகம் தனது தாய்யிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சண்முகம், பாக்கியத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர்.