சாலை விபத்தில் ஒருவர் பலி

மதுரை திருமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார்;

Update: 2025-04-16 01:19 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரிசல்காளாம்பட்டியை சேர்ந்த ஆசைத்தம்பி (55) என்பவர் திண்டுக்கல் கொடை ரோட்டில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவர் விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் நேற்று( ஏப்.15) திருமங்கலத்தில் உள்ள உறவினரை பார்க்க சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் கரிசல்களாம்பட்டிக்கு ஊருக்கு திரும்பினார். இவர் மேலக்கோட்டை விலக்கு அருகே வந்த போது மதுரை விருதுநகர் நான்கு வழிச்சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்து காயமடைந்தார். இதனை கண்டவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News