சேலம் கருப்பூர் அருகே வாலிபர் தற்கொலை

போலீசார் விசாரணை;

Update: 2025-07-10 08:42 GMT
சேலம் மாவட்டம் கருப்பூர் ஸ்ரீபூமிநகர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் மணிகண்டன் (வயது 29). பட்டதாரி. இவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் அங்கு சென்றனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து வாலிபர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News