சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தவர் செந்தில் (வயது37). இவர் சின்னக்கொல்லப்பட்டி பகுதியில் இருந்து ஏற்காடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து ஏற்காடு சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.