சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த பிரவீன்குமார் அபிநபு சென்னைக்கு மாற்றப்பட்டார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனில்குமார் கிரி சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் அனில்குமார் கிரி நேற்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.