மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;
அரியலூர்,,ஜூலை 31- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைகேட்புக்கூட்டத்தில், 11 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்துக்கு, ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களிடமிருந்து பெறப்பட்ட 330 மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், இம்முகாமில் சக்கர நாற்காலி வேண்டி மனு அளித்த பள்ளி மாணவிக்கு உடனடியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் சக்கர நாற்காலியை வழங்கினார். முன்னதாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.32,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கநர் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். படவிளக்கம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் சார்பில் பள்ளி மாணவி ஒருவருக்கு சக்கர நாற்காலியை வழங்கிய ஆட்சியர் பொ.ரத்தினசாமி.