செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு!

செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-09-16 15:31 GMT
செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் இன்று (16.09.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான், திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு, காவல் நிலைய போலீசாரிடம் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் குறித்தும் விரிவாக வழிகாட்டினார். மேலும், காவல் நிலைய வரவேற்பாளரிடம், புகார் மனு பதிவு செய்யப்பட்டவுடன் மனுதாரருக்கு உடனடியாக வரவேற்பு சீட்டை வழங்க வேண்டும் எனத் தெளிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. நிரேஷ் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Similar News