உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் மனுக்கள் அளித்த பயனாளிளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்.பி கே.ஆர் என்.ராஜேஷ்குமார்.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நாமக்கல் வட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் மனுக்கள் அளித்த 415 பயனாளிளுக்கு ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;

Update: 2025-09-19 14:30 GMT
நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , மாவட்ட துர்காமூர்த்தி, தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலையில், நாமக்கல் வட்டத்தில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 415 பயனாளிகளுக்கு ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்த்தாவது,தமிழ்நாடு முதலமைச்சர் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தினை கடந்த 15.07.2025 அன்று தொடங்கி வைத்தார்கள். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 24 நகர்ப்புற மற்றும் 15 ஊரகப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. மொத்தம் - 238 முகாம்கள் (நகர்ப்புறம் – 110, கிராமப்புறம் -118) நடத்திட திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரையும் (நகர்ப்புறம் -44, கிராமப்புறம் -58), 2-ம் கட்டமாக ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 14 வரையும் (நகர்ப்புறம் -36, கிராமப்புறம் -40) என 196 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டு, 86,565 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் முகாம் நடைபெற்ற நாளன்றே உடனடி நடவடிக்கையாக 9,400 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 60,252 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. மேலும், 3-ம் கட்டமாக செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 10 வரை 60 முகாம்கள் (நகர்ப்புறம்-30, கிராமப்புறம் -30) நடத்திட திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து, நாமக்கல் வட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, இன்றைய தினம் 425 பயனாளிகளுக்கு ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகளிர் விடியல் பயண திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயின்றவர்கள் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை, அறிவியில், செவிலியர் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி பயில்வதை ஊக்குவித்திட 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் விடுதி, புத்தகம், உணவு ஆகியவற்றின் கட்டணத்தினை அரசே செலுத்துகிறது. எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சிறப்பாக நடைபெற பணியாற்றி வரும் வருவாய்த்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மின்சார துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சிகள் துறை, ஊரக வளர்ச்சி முகமை, மாநகராட்சி, தொழிலாளர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைச் சார்ந்த அலுவலர்களுக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்தார். பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,14,844/- மதிப்பில் மடக்கு குச்சி, மூக்கு கண்ணாடி, பேட்டரி வீல்சேர், சமூக நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.90,000/- மதிப்பில் பெண் குழந்தை வைப்புத்தொகை இரசீது பத்திரம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிர்வு தொகை, மாவட்ட தொழில் மையம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.82.00 இலட்சம் மதிப்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், கலைஞர் கைவினைத் திட்டத்தில் நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.12,800/- மதிப்பில் இலவச சலவை பெட்டி, நாமக்கல் மாநகராட்சி சார்பில் 39 பயனாளிகளுக்கு சொத்து வரி பெயர் மாற்றம், திருத்தம், புதிய சொத்து வரி விதிப்பு, சொத்து வரி பிறப்பு சான்றிதழ் பெயர் பதிவு, திருத்தம் ஆகிய சான்றுகளையும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு வீட்டு வரி இரசீது, ஊரக வேலைவாய்ப்பு அட்டை, குடிநீர் இணைப்பு ஆணைகளையும், வருவாய்த்துறையின் சார்பில் 118 பயனாளிகளுக்கு ரூ.46.00 இலட்சம் மதிப்பீட்டில் இ-பட்டா, இலவச வீட்டுமனை பட்டா, சான்று, பட்டா மாறுதல், பட்டா நகல், உட்பிரிவு / தனிப்பட்டா ஆணைகளையும், மின்சாரத்துறையின் சார்பில் 78 பயனாளிகளுக்கு புதிய மின்இணைப்பு, பெயர் மாற்றம் ஆணை, தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 90 நபர்களுக்கு புதிய பதிவு, 10 பயனாளிகளுக்கு ரூ.21400/- மதிப்பில் கல்வி உதவித்தொகை, கூட்டுறவுத்துறையின் சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.18,49,500/- மதிப்பில் சிறுவணிக கடன், நடுத்தர பண்ணை, புதிய வீடு கட்டும் கடன், மாற்று திறனாளி கடன், வட்ட வழங்கல் துறையின் சார்பில் 40 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகள், சுகாதாரத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு முதலமைச்சர் விரிவான காப்பீடு அட்டைகளையும் என மொத்தம் 425 பயனாளிகளுக்கு ரூ.1,48,88,544/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், துணை மேயர் செ.பூபதி, மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி, தனித்துணை ஆட்சியர் ச.பிரபாகரன் (சமூக பாதுகாப்பு திட்டம்), உதவி ஆணையர் (தொழிலாளர் நல வாரியம்) திருமதி இந்தியா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி தி.காயத்திரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி எஸ்.கலைச்செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி.மு.கிருஷ்ணவேணி உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Similar News