நாமக்கல்லில் இன்று சிலப்பதிகாரப் பெருவிழா மற்றும் சிலம்பொலி யார் பிறந்தநாள் விழா!
நாமக்கல்லில், சிலப்பதிகாரப் பெருவிழா மற்றும் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் 96–ஆவது பிறந்த நாள் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை(செப்டம்பர் .21) கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.;
நாமக்கல் அருகே சிவியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன். கடந்த 1928 செப்டம்பர் 24–இல் பிறந்த அவர் 2019 ஏப்ரல் 6–இல் காலமானார். அவரது நினைவாக, நாமக்கல்–சேந்தமங்கலம் சாலையில் முழுஉருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவருடைய பிறந்த நாள் விழாவை கொண்டாடும் பொருட்டு, சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை சார்பில் சிலப்பதிகாரப் பெருவிழா மற்றும் சிலம்பொலியார் 96–ஆம் பிறந்த நாள் விழா நாமக்கல்–பரமத்தி சாலை கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் இன்று செப்டம்பர்-21 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. விழாவில், நாமக்கல் கொங்கு நாட்டு வேளாளர் சங்க தலைவர் பி.கே.வெங்கடாசலம் வரவேற்கிறார். பிஜிபி குழும தலைவர் பழனி ஜி.பெரியசாமி தலைமை வகிக்கிறார். நாமக்கல் தமிழ்ச்சங்க செயலாளர் கோபால.நாராயணமூர்த்தி விருதாளர்கள் அறிமுக உரையாற்றுகிறார்.இலங்கை கிழக்குப்பல்கலைக்கழகம் கலை கலாசார பீடம், இந்து நாகரிகத் துறை மேனாள் துறைத் தலைவர் பேராசிரியர் சாந்திகேசவனுக்கு ‘இளங்கோ விருது’ மற்றும் ரூ.50 ஆயிரம் பொற்கிழி வழங்கப்படுகிறது. நாமக்கல் பாவை பொறியியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு உயிரியல் மருத்துவ பொறியியல் மாணவி ரா.அபர்ணாக்கு ‘சிலம்பொலியார் மாணவர் விருது’ மற்றும் ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கப்படவுள்ளது. நாமக்கல் தமிழ்ச்சங்க தலைவர் இரா.குழந்தைவேல், கம்பன் கழக தலைவர் வ.சத்தியமூர்த்தி ஆகியோர் விருதாளர்களை வாழ்த்தி பேசுகின்றனர். மேலும், திருச்சி முனைவர் பட்ட ஆய்வாளர் வி.வீரபாலாஜி சிலப்பதிகாரம் குறித்து பேசுகிறார். சிலம்பொலியார் குறித்து தமிழறிஞர் மரபின்மைந்தன் முத்தையா விழாப் பேரூரையாற்றுகிறார்.நிகழ்ச்சியை தமிழன் ராகுல் காந்தி தொகுத்து வழங்குகிறார்.விழா நிறைவில்,அறக்கட்டளை தலைவர் செ.கொங்குவேள் நன்றி கூறுகிறார்.விழாவில், அனைத்து தமிழறிஞர்களும், பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும் என சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.