பங்குனி மாதம் முதல் ஞாயிறு- நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்!
புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது.;
புரட்டாசி அமாவாசை மற்றும் புரட்டாசி தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பாலபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்தனர். நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு, அனுமன் ஜெயந்தி, தீபாவளி, பொங்கல் பண்டிகைகள், அமாவாசை, பௌர்ணமி மற்றும் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் , சொர்ணம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதன்படி,புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை (செப்டம்பர் -21) முன்னிட்டு சுவாமிக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது.பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்த பின் மஹா தீபம் காண்பிக்கபட்டது. மேலும்,மகாளய அமாவாசை நாள் என்பதால் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.