மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு ரூ.28.92 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;

Update: 2025-09-22 13:42 GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 522 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தாட்கோ சார்பில் 9 பயனாளிகளுக்கு பேக்கரி, சுமை வாகனம், சூப்பர் மார்க்கெட், சுற்றுலா வாகனம், வெல்டிங் பட்டறை, ஜெராக்ஸ் கடை உள்ளிட்ட தொழில்களுக்கு ரூ.84,50,827/- மொத்தத் தொகையில் ரூ.27,11,860/- மதிப்பில் மானியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் படேல்நகர் பேஸ்-1 அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பயனாளிக்கு (இந்தியன் வங்கி நிதியாக ரூ.1.34 இலட்சம், பயனாளி சொந்த நிதி ரூ.15,000/-) ரூ.1.49 இலட்சம் மதிப்பிலான வீட்டிற்கான கடனுதவி ஆணை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.31,500/- மதிப்பில் சர்க்கர நாற்காலிகளையும் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ.28,92,360/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ச.பிரபாகரன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News