நாமக்கல் கட்டுனர் சங்கம் சார்பில் பொட்டிரெட்டிபட்டியில் இலவச மருத்துவ முகாம் !

பிஏஐ சார்பில் கிராமப்புற மக்களுக்கு உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மாதம் இருமுறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. -பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா நாமக்கல் மையத்தலைவர் பி.எஸ்.டி. தென்னரசு தகவல்.;

Update: 2025-09-28 15:55 GMT
பொட்டிரெட்டிபட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழை, எளிய கிராம மக்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில், அகில இந்திய கட்டுனர் சங்க, நாமக்கல் மையம் மற்றும் விவேகானந்தா மருத்துவ கல்லூரி சார்பில், பொட்டிரெட்டிபட்டியில் பில்டர்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா சார்பில் 14வது மருத்துவ முகாம் நடைபெற்றது .முகாமிற்கு அகில இந்திய கட்டுநர் சங்கம் நாமக்கல் மைய தலைவர் டாக்டர் பி.எஸ்.டி .தென்னரசு தலைமை தாங்கி பேசினார். சேலம் ஆர் .கே. கன்ஸ்ட்ரக்சன் கர்ணன் என்கிற கருணாநிதி முன்னிலை வைத்தார். மகேந்திரா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் சாம்சன் ரவீந்திரன், நாமக்கல் கட்டுனர் சங்க அறக்கட்டளை செயலாளர் ஜி. ஆர். எம்.கன்ஸ்ட்ரக்சன் கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா நாமக்கல் மையத்தலைவர் பி.எஸ்.டி.தென்னரசு பேசுகையில்... பிஏஐ சார்பில் கிராமப்புற மக்களுக்கு உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மாதம் இருமுறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.இதுவரை நடைபெற்ற 13 முகாம்களில் மொத்தம் 3500க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு பிஏஐ மூலம் உதவிகள் செய்யப்படுகிறது என தெரிவித்தார்.சுவாமி விவேகானந்தா மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் மருத்துவக்குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பொது மருத்துவம் ,எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, மகளிர் நல மருத்துவம், கண் பரிசோதனை, பொது அறுவை சிகிச்சைக்கான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.மேலும் இதில் பொட்டிரெட்டிபட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் துளசிராமன்,ஊர் மணியக்காரர் மணிமாறன் மற்றும் முன்னாள் தர்மகர்த்தா கிருஷ்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.இந்த முகாமில் 500க்கும் மேற்பட்டோர், உடல் பரிசோதனை செய்துகொண்டனர் .

Similar News