வலிவலம் ஊராட்சியில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் மிக மோசமான நிலையில்

பழுதடைந்துள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலத்திற்கு புதிய கட்டிடம்;

Update: 2025-10-14 03:00 GMT
நாகை மாவட்டம், திருக்குவளை வட்டம் வலிவலம் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான நிலையில் மிக மோசமான நிலையில் உள்ளது. பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததால், கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. தினசரி சேவைகள் பெற ஏராளமான பொதுமக்கள் இங்கு. வருகை தருகின்றனர். குறிப்பாக, சாகுபடி காலங்களில் சிட்டா அடங்கல் பெறுவது, பட்டா மற்றும் தங்கள் வசமுள்ள நன்செய் மற்றும் புன்செய் நில புல எண் விவரம் பெறுவது போன்ற அத்தியாவசிய பணிகள் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெறுகிறது. அந்த கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலரின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது. மேலும், ஒரு சில சமயங்களில் குறிப்பாக மழைக்காலங்களில் கட்டிடத்தின் கான்கிரீட் பூச்சுகள் சிறிது சிறிதாக இடிந்து விழுந்து வருவதால் நேரடியாக மக்கள் சேவைக்கு தடையாகவும், பாதுகாப்பு பிரச்சனைகளையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடனடியாக புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து பழைய கட்டிடத்தை இடித்து, புதிய, பாதுகாப்பான அலுவலக கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என்று ஊராட்சி பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மக்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News