ஐப்பசி மாத வளர்பிறை பஞ்சமி - நாமக்கல் ஸ்ரீ மஹாவாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு!
பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேற தேங்காயில் விளக்கேற்றி வழிபாடு செய்தனா்..... அனைவருக்கும் கோவில் நிர்வாகம் அன்னதானம் வழங்கப்பட்டது.;
நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை எம்ஜிஆர் நகரில் (ரயில் நிலையம் அருகில்) ஸ்ரீ தங்காயி அம்மன் மற்றும் ஸ்ரீ மஹாவாராஹி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை பஞ்சமி திதி நாளன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஐப்பசி மாத வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ மஹாவாராஹி அம்மனுக்கு பால், பன்னீா், தயிா், குங்குமம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மஹாவாராஹி அம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். ஏராளமான பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேற தேங்காயில் விளக்கேற்றி வழிபாடு செய்தனா் பக்தா்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதுகுறித்து முத்தானந்தா சுவாமிகள் கூறியது வருமாறு.. வாராஹி அம்மனை செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகள் மற்றும் அமாவாசை, பௌர்ணமி, வளர் பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி திதி நாட்களில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும். வாராஹி அம்மனை மனமுருகி வழிபாடு செய்தால் குடும்பம் செல்வ செழிப்போடு சீரும் சிறப்புமாக பல தலைமுறைகளுக்கு தழைத்தோங்கும்.வாராஹி அம்மனை "ஓம் வாராஹி தாயே நீயே துணை" என்ற மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் கஷ்டங்கள், எதிரி தொல்லை, கடன் தொல்லை, பணப்பிரச்னை உட்பட அனைத்து பிரச்னைகளும் தீரும் என்பது ஐதீகமாகும் என அவர் தெரிவித்தார். நாமக்கல் வாராஹி கோவிலில் நடைப்பெற்று வருகிற கட்டிட திருப்பணிக்கு பக்தர்கள் தங்களால் இயன்ற வரை நிதியுதவி வழங்கும்படி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்