நாமக்கல் மாவட்டத்தில் யோகா பயிற்சியாளர் தேர்வுக்கு அழைப்பு.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் – நாமக்கல் மாவட்ட பிரிவு நாமக்கல் மாவட்டத்தில் ”யோகா பயிற்சியாளர்” தேர்வுக்கு அழைப்பு.;
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் யோகா வகுப்புகளைப் பயன்படுத்துவர்களுக்கான கட்டணம் மாதத்திற்கு ரூ.300/- வீதம் வசூலிக்கப்படும். பயிற்சியாளராக நியமித்திட தகுதிகள் 1. தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை அறிவியல் இளங்கலை பட்டம் / யோகா மற்றும் இயற்கை அறிவியல் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 2. யோகா வகுப்புகள் காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை, காலை 7.15 மணி முதல் 8.15 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 5 மணி வரை, மாலை 5.15 மணி முதல் 6.15 மணி வரை (1 நாளைக்கு மொத்தம் 4 அமர்வுகள்) நடத்தப்படும். தகுதி வாய்ந்த யோகா பயிற்சியாளர்கள் தங்களுடைய பயோடேட்டா மற்றும் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகலுடன் 03.11.2025 மாலை 4.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட விளையாட்டு அலுவலத்திற்கு நேரில் வந்து தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை கைபேசி எண்:7401703492-ல் தொடர்பு கொள்ளலாம்.