மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்ற எம்.பி வி.எஸ் மாதேஸ்வரன்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டம், குழுவின் தலைவர் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் தலைமையில்,;
குழுவின் உறுப்பினர் செயலர் / மாவட்ட ஆட்சியர் குழுவின் உறுப்பினர்கள் / சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.இராமலிங்கம் (நாமக்கல்), ஈ.ஆர்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ஒன்றிய அரசின் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், மண் வள அட்டை இயக்கம், பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம், பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சூரிய ஒளி சக்தியுடன் இயங்க கூடிய மின்மோட்டார் பம்புகள் வழங்கும் திட்டம், சூரிய கூடார உலர்த்தி அமைக்கும் திட்டம், அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்ப இயந்திரங்கள் வழங்கும் திட்டம், வேளாண் இயந்திரங்கள் துணை இயக்கம், வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தி பம்ப் செட்டுகளுக்கான பழுது நீக்கும் பராமரிப்பு மையம், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், தோட்டக்கலைத்துறை நுண்ணீர் பாசன திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டம், தொடக்க கல்வி, பள்ளிக்கல்வி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், போஷன் அபியான், மதிய உணவு திட்டம், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், தேசிய அளவில் நில அளவை ஆவணங்கள் நவீனமயமாக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் தீன்தயாள் அந்தோதயா யோஜனா திட்டம், தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக்கடன் வழங்கும் சிறப்புத்திட்டம், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம், கனிம வளத்துறை, நீர்வளத்துறை, பொது சேவை மையம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தேசிய நெடுஞ்சாலை திட்டம், நெடுஞ்சாலைகள் துறை, நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்திட்டம் ஆகிய திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.நகராட்சி நிர்வாகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் தூய்மை பாரத இயக்கம், நவீன தொழில்நுட்ப முறையில் குப்பைகளை அகற்றுதல், தனிநபர் இல்லக் கழிப்பிடம் கட்டுதல், வள மீட்பு மையம் கட்டுதல், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம், சமுதாயக் கழிப்பிடம் கட்டுதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊரக குடிநீர் இயக்கம், பாரத பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிகள் அனைத்தும் திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி தரமாகவும், குறித்த நேரத்திலும் முடிக்கப்பட வேண்டும் என குழுவின் தலைவர் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.மாதேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், நாமக்கல் மாநகராட்சி ஆணையாளர் க.சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் வே.சாந்தி (நாமக்கல்), பி.எஸ்.லெனின் (திருச்செங்கோடு), ஆவின் பொது மேலாளர் மரு.ஆர்.சண்முகம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சு.சுந்தரராஜன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் லீலாகுமார் (வளர்ச்சி), க.இராமச்சந்திரன் (வேளாண்மை) துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.