திண்டுக்கல்லுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் ஜனவரி மாதம் 7-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகை தருவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருந்தினர் மாளிகை, விழா மேடை உள்ளிட்ட பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்