செட்டிபாளையத்தில் தென்னை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தவர் உயிரிழப்பு.

செட்டிபாளையத்தில் தென்னை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தவர் உயிரிழப்பு.;

Update: 2026-01-02 15:21 GMT
செட்டிபாளையத்தில் தென்னை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் தாந்தோணி மலை காவல் எல்லைக்குட்பட்ட வரவனை அருகே உள்ள மேத்தா வெள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் ரவிக்குமார் வயது 35. இவர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள சாய்ராம் என்ற தோட்டத்தில் ஜனவரி 1ஆம் தேதி காலை 11 மணியளவில் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து கீழே விழுந்ததில் தலையிலும் உடலிலும் பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த ரவிக்குமாரின் மனைவி வனிதா வயது 30 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உயிரிழந்த ரவிக்குமாரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணி மலை காவல் துறையினர்.

Similar News