வேடசந்தூர் அருகே புல்லட்டில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் கைது
திண்டுக்கல் வேடசந்தூர்;
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் டிஎஸ்பி.பவித்ரா உத்தரவின் பேரில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் மூர்த்தி தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் நாகம்பட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது புல்லட்டில் பட்டாகத்தியுடன் வந்த வேடசந்தூர் மைனர் காலனியை சேர்ந்த ராஜா மகன் முனியப்பன்(28) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து பட்டாக்கத்தி பறிமுதல் செய்து வேடசந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்