சென்னையில்,நுகர்வோர்களின் முப்பெரும் விழா நாகை நிர்வாகிகள் பங்கேற்பு:
நுகர்வோர் அமைப்பில் முப்பெறும் விழா;
தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் தேசிய பொதுசெயலாளர் முனைவர் பால்பர்ணபாஸ் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது தமிழ்நாட்டில் நுகர்வோர் அமைப்பு தொடங்கி 23 வது ஆண்டு விழா தொடர்ந்து மக்கள் சேவை செய்து வருகிறது. நுகர்வோர்களுக்காக சிறப்பாக செயல்பட்ட நுகர்வோர் பேரமைப்புக்கு தமிழ் நாடு அரசின் முதல் மாநில அரசு விருது பெறுகின்றது இந்நிகழ்வில் அமைப்பின் மாநில தலைவருக்கு பாராட்டு விழா தலைவரின் மகள் பிறந்தாள் விழா ஆகிய முப்பெரும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நீதிஅரசர் எஸ்.கே .கிருஷ்ணன் மனித உரிமைகள் கழக மாநில தலைவர் முனைவர் விஜயகுமார் மாநில துணை தலைவர் ரவிச்சந்திரன் டாக்டர் எம் பாலாஜி நுகர்வோர் விழி பத்திரிக்கை மாத இதழ் ஆசிரியர் டாக்டர் என் சங்கர், வடசென்னை வடசென்னை மாவட்ட தலைவர் சுகுமார்,மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சரவணன் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகை வெண்ணிலா, மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிகள் சுந்தர்ராஜன், கண்ணன், ராணி, ஜெயக்குமார், கார்த்தி, பீர் முகமது மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.