இலவச சேலை வேஷ்டி வழங்கும் விழா
குமாரபாளையத்தில் பொதுநல அமைப்பின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.;
குமாரபாளையத்தில் பொதுநல அமைப்பின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. 22ம் ஆண்டாக பவானி பிரபாத் ஜே கே.நாராயணன் பொதுநல அமைப்பின் சார்பாக இலவச சேலை வேஷ்டி மற்றும் உணவு வழங்கும் விழா, தலைவர் மகேந்திரன் தலைமையில் நடந்தது. பொறியாளர் தண்டபாணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பவானி நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி பங்கேற்று, இலவச சேலை வேட்டிகளை இரண்டாயிரம் நபர்களுக்கு வழங்கினார்கள். இதில் வழக்கறிஞர் பாலசுப்ரமணியம், நகராட்சி துணை தலைவர் மணி, பவானி அ.தி.மு.க. நகர செயலர் சீனிவாசன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் மாதேஸ்வரன், ராமராஜ் செய்தருந்தனர்.