தச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.

ஆரணி அடுத்த தச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றதில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் ஆரணி எம்.பி, எம்.எஸ்.தரணிவேந்தன்.;

Update: 2026-01-08 00:45 GMT
ஆரணி அடுத்த தச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. ஆரணி அடுத்த தச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் பள்ளி தலைமயாசிரியர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். இதில் மேற்குஆரணி ஒன்றியசெயலாளர் துரைமாமது தலைமை தாங்கினார். ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 86 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மேலும் இதில் மாவட்டதுணைசெயலாளர் ஜெயராணிரவி, நகரமன்றதலைவர் ஏ.சி.மணி, ஒன்றியசெயலாளர்கள் எஸ்.எஸ்.அன்பழகன், சுந்தர், மோகன், நகரபொறுப்பாளர் சைதை வ.மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News