சவுண்டம்மன் திருவிழா ஜோதி அழைப்பு
குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில் திருவிழாவையொட்டி அம்மனின் ஜோதி அழைப்பு வைபவம் நடந்தது.;
குமாரபாளையம் சேலம் சாலை ஸ்ரீஇராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. ஜன. 12ல் சுவாமி வீட்டார் அழைப்பு, ஜன. 13ல் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைப்பு வைபவம் நடந்தது.நேற்றுமுன்தினம் காவிரி ஆற்றிலிருந்து சாமுண்டி அழைப்பு, பெரிய பொங்கல் பூஜை நடந்தது. நேற்று மாலை மகா ஜோதி அழைத்தல் வைபவம் நடந்தது. இதில் அம்மனை ஜோதி வடிவமாக முக்கிய வீதிகளின் வழியாக, வீர குமாரர்கள் கத்தி போட்டவாறு அழைத்து வந்தனர். இன்று காலை 07:30 மணிக்கு அம்மன் கோவிலிலிருந்து மஞ்சள் நீராட்டு மெரவணை, மாலை 06:00 மணிக்கு சத்தாபரணம் அலங்கார மெரவணை மற்றும் வாண வேடிக்கை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.