மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

குமாரபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வட்டாட்சியர்அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.;

Update: 2026-01-22 16:12 GMT
குமாரபாளையம் அடுத்துள்ள ஓலப்பாளையம், பல்லக்காபாளையம், தட்டாங்குட்டை, நேரு நகர் ,கோட்டைமேடு, வெப்படை, காந்திநகர், வாய்க்கால் மேடு, சின்னார் பாளையம், படைவீடு, அம்மாசி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சொந்த வீடு ,நிலம் இல்லாத 250க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த விவசாய மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் வீட்டு மனை கேட்டு பலகட்ட போராட்டம் நடத்தியும் ,பல ஆண்டுகள் ஆகியும் வீட்டுமனை வழங்கப்படாத நிலை உள்ளது . பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமதி தலைமை வகித்தார். மாவட்ட குழு செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ,அசோகன் ,முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் துரைசாமி, சி.பி.எம், நகர செயலர் சக்திவேல், நகர செயலர் கந்தசாமி உள்பட பலர் பங்கேற்று பேசினர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில குழு உறுப்பினருமான டெல்லி பாபு பங்கேற்று பேசினார். இவர் பேசியதாவது: 2026 ஜனவரி 20-ஆம் தேதிக்குள் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர் .இதனை ஏற்றுக் கொண்ட போராட்டக்காரர்கள் கடந்த போராட்டத்தின் போது தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்தனர் .மாவட்ட கலெக்டர் இங்கு வருவதாக பேச்சு எழுகிறது. எங்களுக்கு வீட்டு மனை மற்றும் பட்டா வழங்காவிடில் நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. இவ்வாறு அவர் பேசினார். நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கி மாலை வரை இந்த காத்திருப்பு போராட்டம் நீடித்தது.

Similar News