நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை (ஜனவரி 24) முதல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அம்பை வனக்கோட்டத்தில் நடந்து வந்த புலிகள் கணக்கெடுப்பு பணி நாளையுடன் நிறைவு பெற உள்ள நிலையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.