புதிய நியாய விலை கடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 25வது வார்டு;
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 25வது வார்டுக்குட்பட்ட டவுன் காவல் நிலையம் எதிரில் அமைந்துள்ள மாநகராட்சி அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்தில் புதிய நியாய விலை கடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ், மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.