திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் எஸ்டிபிஐ கட்சியின் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி கூட்டம் பேரவை தலைவர் காஜா பிர்தெளஸி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எஸ்டிபிஐ மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் கூட்டணி கட்சியின் வெற்றிக்காக தீவிரமாக உழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.