திருக்காம்புலியூரில் - கரூர் புதிய பேருந்து வழித்தடம் தொடங்கி வைத்தல்

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார்;

Update: 2026-02-05 08:11 GMT
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்காம்புலியூர் ஊராட்சியில் மேட்டுதிருக்காம்புலியூர் இருந்து கரூர் வரை புதிய பேருந்து வழிதடத்தை எம்எல்ஏ சிவகாமசுந்தரி, கொடியசைத்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் கரூர் போக்குவரத்துத்துறை துணை மேலாளர் சாமிநாதன், கிளை மேலாளர் நல்லுகுமார். கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரவி ராஜா, மாவட்ட ஆதிதிராவிடரணி அம்பிகா பதி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மோகன்குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கே.எஸ்.பரமசிவம், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சாக்ரடீஸ், முன்னாள் மாவட்ட இளைஞர் துணை அணி அமைப்பாளர் அன்பழகன், கிளை செயலாளர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News